தேர்தலுக்காக இன்றும் பேருந்துகளை இயக்க தீர்மானம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
தேர்தலுக்காக இன்றும் பேருந்துகளை இயக்க தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21.09) பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 அதன் தலைவர் திரு.கெமுனு விஜேரத்ன கூறுகையில், பயணிகள் அதிகாலையில் வந்து தங்களுடைய இடங்களுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 இதேவேளை, 3300 லங்காம பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.