தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
#SriLanka
#Election
#sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மொத்த புகார்களின் எண்ணிக்கை 5551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் சட்ட மீறல்கள் தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதுவரை பெறப்பட்ட மொத்த புகார்களில் 4929 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.