ஊரடங்கு சட்டத்தை உடனடியாக அமுற்படுத்த தயார் : பாதுகாப்பு பிரதானிகள் அறிவிப்பு!
#SriLanka
#Election
#Curfew
Dhushanthini K
2 hours ago
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் அவசியம் ஏற்பட்டால் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேவைக்கு ஏற்ப ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.