கனேமுல்ல சஞ்சீவவின் சிறைக்கூடம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சோதனை

#SriLanka #Prison #Mobile #prisoner
Prasu
2 hours ago
கனேமுல்ல சஞ்சீவவின் சிறைக்கூடம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் சோதனை

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சிறைக்கூடம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கனேமுல்ல சஞ்சீவ தரையில் மறைத்து வைத்திருந்த நவீன கையடக்கத் தொலைபேசியை கீழே அடுத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

 எவ்வாறாயினும், கையடக்க தொலைபேசியை அதிரடிப் படை அதிகாரிகள் கைப்பற்றிய போதிலும் அதின் சிம் அட்டை கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.