வரலாற்றில் அமைதியான தேர்தல்: வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை! பொலிஸ்

#SriLanka #Election
Mayoorikka
1 hour ago
வரலாற்றில் அமைதியான தேர்தல்: வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை! பொலிஸ்

இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இதேவேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது.

 தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.