இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் அனுரகுமார திசாநாயக்க!

#SriLanka #Sri Lanka President #AnuraKumara
Mayoorikka
2 hours ago
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் அனுரகுமார திசாநாயக்க!

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 இதன்படி, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்கிறார்.

 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தைப் பெறாததால் தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ண வேண்டியிருந்தது.

 அனுர திஸாநாயக்க – 5,634,915 – 42.31%

 சஜித் பிரேமதாச – 4,363,035 – 32.76%