ஹரிணி அமரசூரிய சற்றுமுன் பிரதமராக பதவியேற்றார்!

#SriLanka
Dhushanthini K
2 hours ago
ஹரிணி அமரசூரிய சற்றுமுன் பிரதமராக பதவியேற்றார்!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இலங்கையின் மூன்றாவது பிரதமராக வரலாறு படைத்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதற்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்தனர்.

2020 பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் படையின் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அரசியலில் நுழைவதற்கு முன்பு, கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார்.