ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

#SriLanka
Mayoorikka
2 hours ago
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர், தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தவறான செலவு அறிக்கைகள் இருந்தால், சரிபார்க்கக்கூடிய ஆவணங்களுடன் யார் வேண்டுமானாலும் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கோடியே எழுபத்து ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு (17,140,354) வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரச்சாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.