மன்னாரில் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த கோரிக்கை கடிதம்!

#Sri Lanka President #Mannar #AnuraKumara
Mayoorikka
3 hours ago
மன்னாரில் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த  கோரிக்கை கடிதம்!

மன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மது விற்பனை நிலைய அனுமதி பத்திரத்தை ரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

images/content-image/2024/1727409766.jpg

 குறித்த மதுபானசாலை பாடசாலை , ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள மையானது குறித்த பகுதி மக்களிடையே பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!