காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டதிற்கு அழைப்பு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
2 hours ago
சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி க.கோகிலவாணி தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட் ஜனாதிபதி எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பிட்டது. போல பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.