கடல் எல்லையை தாண்டிய 17 இந்திய மீனவர்கள் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 hour ago
கடல் எல்லையை தாண்டிய 17 இந்திய மீனவர்கள் கைது!

நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 டெல்ஃப் தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழு இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 02 இந்திய மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய படகுகள் தலைமன்னாரில் உள்ள கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

 இதனிடையே, இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

 இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கு  தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!