வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி செய்த இரு பெண்கள் கைது!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி செய்த இரு பெண்கள் கைது!

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு பெண்களில் ஒருவர், தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.5 லட்சமும், இத்தாலியில் வேலை தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.

ஆனால் உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நீதவான், ஒவ்வொரு வழக்குக்கும் தலா 10 இலட்சம் ரூபா மற்றும் 4 வழக்குகளுக்கும் 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு துபாய் மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணியகம் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு இன்னும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4