வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 3 (October 3)

#Day #World
Prasu
2 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 3 (October 3)

அக்டோபர் 3 கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.

382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.

1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.

1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1789 – சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.

1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1863 – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.

1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.

1912 – அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.

1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.

1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.

1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.

1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.

1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.

1978 – பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர். 

1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. 1986 – டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர். 

1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.

1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர். 

2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. 

2007 – மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 

2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின. 

2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். 

பிறப்புகள் 

1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818) 

1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920) 

1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997) 

1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர்

1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015) 

1932 – வி. பி. இராமன், தமிழக அரசியல்வாதி (இ. 1991) 

1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர் 

1943 – குருசரண் தாஸ், இந்திய எழுத்தாளர் 

1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி 

1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர் 

1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர் 

1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர் 

1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை 

இறப்புகள் 

1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181) 

1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819) 

1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834) 

1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861) 

1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863) 

1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899) 

1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892) 

1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896) 

1989 – க. வச்சிரவேல் முதலியார், சைவ சித்தாந்த அறிஞர் (பி. 1906) 

1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906) 

1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935) 

1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921) 

2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942) 

2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928) 

2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!