இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இந்தியா!
#India
#SriLanka
#jeishankar
Thamilini
1 year ago
இந்தியா 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 முடிக்கப்பட்ட கடன் வரி திட்டங்களுக்கு, ஏ.டி. 20 மில்லியன் கொடுப்பனவுகளை மானியமாக மாற்ற முடியும் எனவும், இலங்கை ரயில்வேக்கு 22 டீசல் இன்ஜின்களை பரிசாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே