இணையம் ஊடாக நிதி மோசடி : வெளிநாட்டு பிரஜைகள் 40 பேர் கைது!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
இணையம் ஊடாக நிதி மோசடி : வெளிநாட்டு பிரஜைகள் 40 பேர் கைது!

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் சுமார் 40 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 கம்பஹா (Gampaha) - ஹன்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல - அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த மோசடி குழுவினர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த வெளிநாட்டவர்கள் குழு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 சீன ஆண்கள் மற்றும் 01 பெண், 03 இந்திய ஆண்கள் மற்றும் 03 பெண்கள், 02 தாய்லாந்து ஆண்கள் மற்றும் 04 பெண்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில், நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 499 கையடக்க தொலைபேசிகள், 24 மடிக்கணினிகள் மற்றும் 29 கணினிகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இதன் படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சர்வதேச காவல்துறையினர் (INTERPOL) மற்றும் யூரோ போலின் (EUPOL) தேவையான ஆதரவுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4