வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 9 (October 9)

#history #Day #Lanka4
Prasu
2 weeks ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 9 (October 9)

கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.

1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.

1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.

1604 – சூப்பர்நோவா பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1708 – உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.

1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1760 – ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.

 1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.

1806 – புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 

1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.

1820 – உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1824 – கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.

1831 – கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.

1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1847 – செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

1854 – உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.

1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1900 – குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.

1934 – யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.

1941 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.

1942 – வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 

1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.

1962 – உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.

1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1966 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1980 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.

1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

1983 – ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.

2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

2004 – ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

2012 – பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

பிறப்புகள்

1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)

1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)

1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)

1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)

1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)

1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)

1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)

1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி

1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)

1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)

1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கைத் தமிழ் மொழியியலாளர் (இ. 2019)

1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)

1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)

1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்

1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்

1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)

1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)

 1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!