சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
சந்தையில் விற்பனை செய்யப்படும் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

இந்நாட்களில் நாட்டின் பிரதான பூச்சிக்கொல்லி மருந்துப் பிராண்டுகளாகக் காட்டிக் கொண்டு போலியான விவசாய  பொருட்களை சந்தையில் விற்பனை செய்யும் கொள்ளையொன்று நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது. 

 இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி விவசாய உள்ளீடுகள் தம்புத்தேகம பகுதியில் உள்ள பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலக சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை போன்று போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்யும் மோசடி  தற்போது நடந்து வருகிறது. 

இந்நிலையில் தம்புத்தேகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடையொன்றில் விற்பனைக்காக கத்தரிக்காய் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் 960 விவசாய உள்ளீடுகள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 இலங்கையில் உள்ள ஒரு முக்கிய விவசாய உள்ளீட்டு நிறுவனம் ஒன்றின் வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி சந்தைக்கு வெளியிடப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட முகவரகத்தின் தலையீட்டின் பேரில், அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் தயாரிப்புகள் அல்ல என உறுதி செய்யப்பட்டது.

 பின்னர் 960 போலி விவசாய இடுபொருட்கள் பாக்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4