வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 10 (October 10)

#people #history #Lanka4
Prasu
1 week ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 10 (October 10)

கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. 

1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 

1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர்.

1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர். 

1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர். 

1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார். 

1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1916 – வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.

1928 – சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1933 – யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். 

1935 – கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1942 – சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. 

1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது. 

1957 – ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது. 

1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் சனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1970 – மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர். 

1971 – விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது. 

1975 – பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது. 1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர். 

1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர். 

1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

1997 – உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர். 

1998 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.

2010 – நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது. 

2015 – துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 102 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர். 

2018 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சூறாவளி மைக்கேல் தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 

பிறப்புகள் 

1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721) 

1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810) 

1811 – வில்லியம் பிரைடன், பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (இ. 1873) 

1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901) 

1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884) 

1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930) 

1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977) 

1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991) 

1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)

1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001) 

1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)

1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008) 

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)

1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008) 

1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்

1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995) 

1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு

1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்

1954 – ரேகா, இந்திய நடிகை 

1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002) 

1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்

1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1990 – ரகுல் பிரீத் சிங், இந்திய நடிகை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!