வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 11 (October 11)

#history #Lanka4 #World #Birth
Prasu
1 week ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 11 (October 11)

கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிச் சுவிங்கிளி கொல்லப்பட்டார்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர்.

1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

1727 – இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார். 

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: கேம்பர்டவுன் சமரில் நெதர்லாந்து கடற்படையுடன் நடந்த மோதலில் அரச கடற்படை வெற்றியடைந்தது.

1811 – முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை ஜூலியானா நியூயார்க்கிற்கும் நியூ செர்சி, ஓபோகின் நகருக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. 

1852 – ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 

1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

1899 – இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது. 

1918 – புவேர்ட்டோ ரிக்கோவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 

1941 – மாக்கடோனியத் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது. 

1944 – துவா மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது. 

1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. 

1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.

1962 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தந்தை 23-ஆம் யோவான் 92 ஆண்டுகளுக்குப் பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தார். 

1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது. 

1984 – உருசியாவின் ஓம்சுக் நகரில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 178 பேர் உயிரிழந்தனர்.

1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கேத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 

1986 – பனிப்போர்: அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஐரோப்பாவில் நடுத்தர ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக ஐசுலாந்து ரெய்க்யவிக் நகரில் சந்தித்தனர்.

1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தது.

2000 – டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது. 

2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். 

2013 – சிசிலி நீரிணையில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர். 

பிறப்புகள்

1738 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (இ. 1814) 

1758 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840) 

1820 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896) 

1826 – மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889) 

1872 – எமிலி டேவிசன், ஆங்கிலேயக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1913) 

1884 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (இ. 1962) 

1896 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (இ. 1982) 

1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979) 

1908 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980) 

1916 – நானாஜி தேஷ்முக், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 2010) 

1917 – வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ், சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1999) 

1922 – எஸ். ராஜேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1999) 

1926 – திக் நியாட் ஹன், வியட்நாமிய கவிஞர், மதகுரு 

1930 – கே. பி. உமர், இந்திய நடிகர் (இ. 2001) 

1942 – அமிதாப் பச்சன், இந்திய நடிகர் 

1947 – லூகாசு பாபடெமோசு, கிரேக்கத்தின் 183வது பிரதமர் 

1952 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014) 

1962 – ஆன் என்ரைட், ஐரிய எழுத்தாளர் 

1969 – மெரீமே சாதிது, மொரோக்கோ வானியலாளர் 

1977 – மாட் போமேர், அமெரிக்க நடிகர் 

1984 – நிவின் பவுலி, மலையாளத் திரைப்பட நடிகர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!