ஆன்லைனில் கொள்வனவு செய்யும் க்ரீம்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆன்லைனில் கொள்வனவு செய்யும் க்ரீம்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆன்லைனில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்று நுகர்வோர் விவகார ஆணையம் கூறுகிறது. 

 இணையத்தளத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் வாடிக்கையாளர் மற்றும் தகவல் பணிப்பாளர்  அசேல பண்டார தெரிவித்தார். 

 அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் தெரிவித்தார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பாக சோசியல் மீடியாக்களில் சென்றால் விளம்பரங்கள் வருவதைக் காணலாம்.அழகான க்ரீம் பயன்படுத்துகிறேன் என்று ஒரு அழகான பெண் வந்து கூறுவார்.

அவர் ஒரு க்ரீம் தருகிறார்.அதை நாம் ஒரு விளம்பரமாகவே பார்க்கிறோம். அந்த விளம்பரத்தைப் பார்த்தால், அந்த விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். 

சில சமயம் போன் நம்பர் இல்லை, முகவரி இல்லை. அதிலும் குறிப்பாக சருமத்திற்காக விற்பனை செய்யப்படும் இந்த வகையான பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்சனை என்றால், இந்த பொருளை எந்த நபர் நமக்கு விற்றார் என்று கண்டுபிடிக்க முடியாது. 

 அந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விஷயங்களை ஆர்டர் செய்வதிலும் பெறுவதிலும் நமது பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக க்ரீம்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும்’’ என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4