சீரற்ற காலநிலையால் 159,547 பேர் பாதிப்பு!

#SriLanka #weather
Mayoorikka
1 year ago
சீரற்ற காலநிலையால் 159,547 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 159,547 பேர் பாதிப்படைந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

 அந்த மாவட்டத்தில் மாத்திரம் 82,000க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அதேநேரம், 2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4