கொலை வழக்கு விசாரணையில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொலை வழக்கு விசாரணையில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பு!

காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட விசாரணையின் பின்னர் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 06.02.2000 அன்று, இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியை இழுத்து நபரொருவரை வேண்டுமென்றே மின்சாரம் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 குற்றம் சாட்டப்பட்டவர் இமதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நேற்று (16.10) மரண தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4