பிரித்தானியாவில் கோர விபத்து - கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் பலி!

#SriLanka
Thamilini
1 year ago
பிரித்தானியாவில் கோர விபத்து - கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் பலி!

 பிரித்தானியாவின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்று கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. 

 ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இதுபற்றி கம்பிரியா பொலிஸார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

 இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4