ஆள்மாறாட்டம் செய்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இத்தாலிய பிரஜை கைது!

#SriLanka
Dhushanthini K
6 days ago
ஆள்மாறாட்டம் செய்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இத்தாலிய பிரஜை கைது!

இத்தாலிய பிரஜை போல் ஆள்மாறாட்டம் செய்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களைப் பயன்படுத்தி 'ஆன் அரைவல் விசா'க்கு விண்ணப்பிக்க முயன்ற 40 வயதான ஈரானியப் பிரஜையை BIA வருகை முனையத்தில் குடியேற்றத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் G 9502 இல் கட்டுநாயக்க வந்த பயணி ஒருவர் வருகைக்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக தனது இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களை உள்ளிட முற்பட்டபோது, ​​ அது தொலைந்துபோனதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இத்தாலிய கடவுச்சீட்டின் உள்ளிடப்பட்ட விவரங்கள் தொலைந்துவிட்டன அல்லது திருடப்பட்டதாக சர்வதேச காவல்துறையுடன் தொடர்புடைய BIA இல் உள்ள குடிவரவுத் துறை அமைப்பு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், பயணி தனது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டர்களுக்கு வழங்க முயன்றார், ஆனால் அவர் விரைவில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!