இஸ்ரேலில் இருந்து வரும் பணம் தொடர்பான அழைப்புகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
3 hours ago
இஸ்ரேலில் வேலை செய்பவர்களுக்கு பணம் செலுத்தும் அழைப்புகளுக்கும் அதன் அலுவலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.
இஸ்ரேலில் பணம் செலுத்திய பணிப் பரீட்சார்த்திகள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் 14,700 ரூபாவை செலுத்துமாறு குறிப்பிட்ட நபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (21.10) பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.