பொதுத் தேர்தலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த பெண் ஒருவர் மீது தாக்குதல்!

#SriLanka #Election #sri lanka tamil news
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த பெண் ஒருவர் மீது தாக்குதல்!

பொதுத் தேர்தலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த திருமதி காந்தி கொடிகார தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு உபாலி கொடிகாரவின் மனைவி திருமதி காந்தி கொடிகார நேற்று (25) பிற்பகல் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

 கணவரின் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று கொண்டிருந்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். 

 தாக்குதலின் பின்னர் திருமதி காந்தி கொடிகார ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய நபரை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4