புகையிரத பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து விலகிய நிலைய அதிபர்கள்!

#SriLanka
Thamilini
1 year ago
புகையிரத பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து விலகிய நிலைய அதிபர்கள்!

இன்று (30) மாலை 4.30 மணி முதல் புகையிரத பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து விலகுவதாக நிலைய அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.சஞ்சய் ஜயசுந்தர தெரிவித்தார்.

இன்று பிற்பகல் கூடிய புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபை தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம்.

பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, புகையிரத பொது முகாமையாளருடனான பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன நேற்று (29) தெரிவித்தார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4