76 வருடம் நாட்டை திவாலாக்கி சீரழித்தவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட மாட்டாது : தேசிய மக்கள் சக்தி!

#SriLanka
Thamilini
1 year ago
76 வருடம் நாட்டை திவாலாக்கி சீரழித்தவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட மாட்டாது : தேசிய மக்கள் சக்தி!

அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால் நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ் போன்று விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது. 

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய NPP உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, மக்கள் நட்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு NPP க்கு மாத்திரமே மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

 “அனுபவமுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ரணில் சொல்வதைக் கேட்டேன். சாரதியின் தவறினால் ஏற்பட்ட விபத்தைப் போன்று அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகாவிட்டால் நாடு KDU பேருந்தைப் போல் நொறுங்கும். 

ஆம் அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது. 76 வருடங்களாக நாட்டை திவாலாக்கி, நாட்டையே நொறுக்கி, திவாலாக்கிய அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கு மக்கள் ஒருபோதும் அதிகாரம் கொடுக்க மாட்டார்கள்,'' எனக் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4