நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும்!

#SriLanka #weather
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (05.11) இரவுகணிசமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 திணைக்களத்தின் படி, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

 "நாளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில், முக்கியமாக மாலை அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை காலை பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4