பாரிஸில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் - 4,000 பொலிசார் குவிப்பு

#people #football #Security #Paris #Violence
Prasu
1 year ago
பாரிஸில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் - 4,000 பொலிசார் குவிப்பு

பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 4,000 பொலிசார் மற்றும் 1,600 மைதான ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய ரசிகர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு பிரான்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது.

வியாழன் அன்று நடைபெறும் UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அணிகள் விளையாடுகின்றன. 

இந்த ஆட்டத்தைக் காண ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை, குறிப்பாக பாரிஸில் நடக்கும் போட்டிகளைத் தவிர்க்குமாறு எச்சரித்தது.

மட்டுமின்றி, ஆர்ப்பாட்டங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் வன்முறை தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் கவனமாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 இந்த நிலையில், அந்த போட்டியானது எங்களுக்கு அதிக ஆபத்துள்ள நிகழ்வாக மாற்றும் சூழல், பதட்டங்கள் உள்ளதாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4