தேர்தல் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை: உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும்!

#SriLanka
Mayoorikka
1 year ago
தேர்தல் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை: உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகப்பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- அனுரகுமார திசநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார்.

அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது இலங்கைக்கு என்னதேவையோ அதனை செய்வதற்கான வலுவான வாக்குறுதியை வழங்குகின்றது.

 1 நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்

 2 பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம்.

 3 தேசிய நல்லிணக்கம் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லீம்களிற்கான உரிமைகள்.

 4 ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம்

 5 சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல்,சதுப்பு நிலங்கள் வனங்கள் வலுச்க்தி மேலும் சில.

 இலங்கையின் அனைத்து நண்பர்களும் அதற்கு உதவ தயாராகவேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4