புதிய பாராளுமன்றத்தை திறப்பதில் உள்ள சில மரபுகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

#SriLanka #Parliament
Thamilini
1 year ago
புதிய பாராளுமன்றத்தை திறப்பதில் உள்ள சில மரபுகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

புதிய பாராளுமன்றத்தை திறப்பதில் உள்ள சில மரபுகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திறப்பு விழாவை முடிந்தவரை எளிமையாக நடத்துவதற்காக இது செய்யப்பட்டுள்ளது. 

 பாராளுமன்றத்தை திறப்பது தொடர்பில் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாக சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

இதன்படி “பாராளுமன்ற வளாகத்தில் இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது அதேவேளை, நவம்பர் 21ஆம் திகதி வியாழன் அன்று புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவில் ஜய மங்கள கதா பாடலும் இடம்பெறாது” என ஜயரத்ன தெரிவித்தார். 

 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வரவேற்கப்பட்டு காத்திருப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து அவர் கொள்கை விளக்கத்தை வெளியிடும் அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். 

 வியாழன் கூட்டத்தொடரின் போது சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க சபையின் தலைவராகவும் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4