சபாநாயகராக அசோக ரன்வல நியமிப்பு!

#SriLanka
Mayoorikka
1 year ago
சபாநாயகராக அசோக ரன்வல  நியமிப்பு!

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்ததுடன், அமைச்சர் விஜித ஹேரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

 தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 109,332 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். விருப்பப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்த்திருந்தார்..

 முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அசோக ரன்வல, பயோஜெனரேஷன் அர்த்தசாஸ்திர ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

 பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றிய ரன்வல, தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து வலுவான தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4