34 வருடங்களுக்கு பின்னர் வழிபாட்டுக்காக மக்கள் அனுமதி!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago
பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்காக நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (20) முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே