கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

#SriLanka
Mayoorikka
1 year ago
கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

 குறித்த பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதனால், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4