சீரற்ற வானிலையால் நால்வர் பலி, ஆறு பேர் மாயம்!

#SriLanka #weather #Flood
Thamilini
1 year ago
சீரற்ற வானிலையால் நால்வர் பலி, ஆறு பேர் மாயம்!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மோசமான காலநிலை காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

66,947 குடும்பங்களில் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார்.

மேலும் இந்நிலைமையினால் 8 வீடுகள் முழுமையாகவும், 620 பகுதி வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4