நிர்ணிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசியை விநியோகித்தால் சட்டநடவடிக்கை!
#SriLanka
#rice
#prices
Thamilini
1 year ago
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விநியோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (10.12) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலை இருந்தால், அவர்கள் அதைப் பற்றி புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 1977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.