அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 வர்த்தகர்கள் சிக்கினர்!
#SriLanka
Mayoorikka
1 year ago
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும், இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் இன்று (11) முதல் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டார்.