யாழில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு!

#SriLanka #Jaffna #Fever
Thamilini
1 year ago
யாழில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. 

யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

 இறந்தவர், 20 முதல் 65 வயதுடையவர்களாவர். அவர்கள் காய்ச்சல் மற்றும் சுவாச சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நோய் பொதுவாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் என சந்தேகிக்கப்படுவதாக டாக்டர் சத்தியமூர்த்தி வெளிப்படுத்தினார், 

ஆனால் இரத்த மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதால் உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளதாக வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!