ஈஸ்டர் தாக்குதல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Easter Sunday Attack #Maithripala Sirisena
Thamilini
1 year ago
ஈஸ்டர் தாக்குதல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு 182ஆம் இலக்க சட்டத்திற்கு அமைய இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுவா பிட்டிய குண்டுத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4