பிரான்ஸ் அகதிகள் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் மரணம்

#Death #France #Refugee #GunShoot #Camp
Prasu
1 year ago
பிரான்ஸ் அகதிகள் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் மரணம்

பிரான்ஸின் Dunkerque மாவட்டத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் Loon-Plage எனும் சிறு நகர்ப்பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

அகதி ஒருவர் ஆயுதத்துடன் வந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

ஆயுததாரி முன்னதாக ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் எனவும், அவரே தற்போது இந்த கொலைகளையும் மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4