அரிசி கட்டுப்பாட்டு விலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை : 300 பேருக்கு எதிராக நடவடிக்கை!
#SriLanka
#Arrest
Thamilini
1 year ago
அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பான சோதனை நடவடிக்கைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 300 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10ஆம் திகதி தொடக்கம் இது வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் பிடிபட்டதாக அந்த அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.