இந்தியாவுடனான தற்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பாராட்டும் ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
Thamilini
1 year ago
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நேற்று (16) புதுடெல்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையை பிராந்திய ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராட்டப்படுகிறார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.