ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
Thamilini
1 year ago
இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று (19) கைச்சாத்திட்டுள்ளது.
இந்த கடன் தொகை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் அதற்கான கடனுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கடன் தொகையை பயன்படுத்தி நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த பல அத்தியாவசிய திட்டங்களை மேற்கொள்ள மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.