உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 15 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
1 year ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 15 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

ஸ்ரீ சரஸ்வதியின் தேவியின் கடாட்சம் கொண்டது இந்த எண். நல்ல ஒழுக்கம் காணப்படும். 

சங்கீதம் கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் காணப்படும். மனைவி மக்களின் சிறப்பும் பொருள் வரவும் காணப்படும். 

மர்ம சக்தியாகவும் நவரத்ன பீடமாகவும் ஐந்து முக்கோண நட்சத்திர முக்கோணம் என்றும் வருணிக்கபடுகின்ற இந்த 15ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் வெற்றி, சாதனை, லாபம், மேன்மைகள் உண்டாகும்.

முக வசீகரமும் பேச்சில் சாதுரியமும் இவர்களின் வசீகரமான செயல்களால் பொருள் வரவும் போகம், போக்கியம், புகழ் போன்றவைகள் எல்லாம் இந்த எண்ணிற்கு வந்து செல்லும்.

உதவிகள் செய்ய அனேக நண்பர்கள் உறவினர்கள் இவை எல்லாம் இந்த எண்ணிற்க்கு நிறைந்து காணப்படும் .

1 என்ற சூரிய சக்தியும் 6 என்ற புதனுடைய சக்தியும் அதாவது ஆத்மாவும் நரம்பும் இணைந்து நிற்பது வீனைகளால் கட்டப்பட்ட நரம்புகள் விரல்களால் ஏவப்ப்படும் பொழுது நாத பிரம்மம் காற்றில் மிதப்பது போல் காமம், குரோதம், வஞ்சக தன்மைகள், சுய நலமும் இந்த எண்ணிற்க்கு உண்டு . 

நேர்மையான பாதையில் முயற்சித்தால் புகழுடன் கிரீடம் தரிக்கும் சூழ்நிலையும் உண்டாகும் . மேலும் இந்த 15ம் எண் சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4