ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

#SriLanka
Thamilini
1 year ago
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது சின்னத்தில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஆரம்பத்தில் SJB உடன் உரையாடுவோம் மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு எத்தனை இடங்களைப் பெற முடியும் என்பதைப் பார்ப்போம். 

பிரச்சினை என்னவென்றால், SJB தங்கள் சொந்த அமைப்பாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் போக்கைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எங்கள் கூட்டணி வாய்ப்புகளை இழக்கும். SJB தலைமையிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால் நாங்கள் தனித்து செல்வோம்”எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4