பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை
#SriLanka
Mayoorikka
1 year ago
பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
எனினும் அந்தத் தொகை போதாது என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.