கடவுச்சீட்டு பிரச்சினை தொடர்பான அறிக்கை பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைப்பு!
#SriLanka
#Passport
Thamilini
11 months ago
இலங்கையில் கடவுச்சீட்டு பிரச்சினையை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
பரிந்துரைகளின்படி, பாஸ்போர்ட் வழங்குவதற்கான தற்போதைய நடைமுறையை மாற்றுவதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்