அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை - இராமநாதன் அர்ச்சுனா!

#SriLanka #doctor #Politics
Thamilini
1 year ago
அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை - இராமநாதன் அர்ச்சுனா!

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனன் கூறுகிறார்.  

நாடாளுமன்ற உறுப்பினரான   அர்ச்சுனா நேற்று (29) மதியம் சிறப்பு காவல் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

 பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், “தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார். 

 இந்த முறை மக்களுக்காக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தான் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் அவர் கூறினார்.  எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. 

38 வருடங்களாக நான் ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் மக்களுக்காகவே இங்கு வந்துள்ளேன். அதனால் இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை” எனத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4