பாரிஸ் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் துஷ்பிரயோகங்களை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

#France #government #Sexual Abuse
Prasu
1 year ago
பாரிஸ் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் துஷ்பிரயோகங்களை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

பிரான்ஸ் தலைநகரில் முதன்முறையாக, பாரிஸ் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கான துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கான சிறப்பு அஞ்சல் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் இதுபோன்ற சுமார் 360 அஞ்சல் பெட்டிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் குழந்தைகள் பாதுகாப்பு சங்கமான லெஸ் பாப்பிலன்கள் அல்லது பட்டாம்பூச்சிகளால் ஆதரிக்கப்படுகிறது.

குழந்தைகள் மீது முன்னெடுக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை வெளியே சொல்ல முடியாவிட்டாலும், அவற்றை எழுதுங்கள் என்ற குறிக்கோளின் அடிப்படையிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

ஜூன் 2022 இல், கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு அஞ்சல் பெட்டி அமைக்கப்பட்ட முதல் நாளில், 10 வயது சிறுமி தனது தாத்தாவை பெயரிட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களை விவரித்து ஒரு செய்தியை விட்டுச் சென்றாள்.

சில நாட்களுக்குப் பிறகு, அவரும் அவரது குடும்பத்தில் உள்ள மற்ற இரண்டு சிறுமிகளும் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பரில் தாத்தா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4